புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் டிச. 14 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச. 14 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே, இம் முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம்.