கறம்பக்குடி அருகே 10 பேருக்கு வாந்தி மயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 10 பேருக்கு சனிக்கிழமை இரவு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 10 பேருக்கு சனிக்கிழமை இரவு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காகுறிச்சி கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட மஞ்சுக்காட்டைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் கவியரசன்(14), மகள் சுகந்தி(1) . இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம், ரங்கம்மாள், சின்னப்பொண்ணு உள்ளிட்ட 10 பேருக்கு சனிக்கிழமை இரவு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு சனிக்கிழமை வழங்கிய புயல் நிவாரண பொருள்கள் தொகுப்பில் இருந்த ஆவின் பால் பவுடர் கலந்து குடித்ததால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர், கறம்பக்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com