ஆலங்குடி அருகே மதுபானங்கள் விற்பனை செய்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் நான்கு சாலைப் பகுதியில் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஆலங்குடி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணி செய்த போது வம்பன் காலனியைச் சேர்ந்த எஸ்.ராஜ்மோகன்(38) மதுபானங்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீஸார், 10 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.