விராலிமலை அருகே மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்றவரை விராலிமலை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, செட்டியபட்டியைச் சேர்ந்த பொன்னுமணி மகன் தங்கவேல் (47), நம்பம்பட்டி பிரிவு சாலையருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.