பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபோகம் புதன்கிழமை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வின் ஒரு பகுதியாக சிவாச்சாரியார் கணேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.