டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு

பொன்னமராவதி வலையபட்டி பழனியப்பா தொடக்கப் பள்ளியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வலையபட்டி பழனியப்பா தொடக்கப் பள்ளியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை பேரூராட்சி செயலர் சுலைமான் சேட் தொடங்கி வைத்தார். வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை சித்த மருத்துவர் தாமரைச்செல்வன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினர்.  
முகாமில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர்  வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com