பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு சார்பில் நடைபெற்ற முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கி.நிர்மலா தலைமை வகித்தார்.
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் டி.தாமரைச்செல்வன் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுக்கும் வழிகள் குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்து பள்ளியின் அனைத்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கினார். தமிழாசிரியர் அழ.பூபதி நன்றி கூறினார்.