புதுக்கோட்டையில் அதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியினர் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், நகரச் செயலாளர் க.பாஸ்கர், திரளான கட்சியினர் பங்கேற்றனர்.