புதுக்கோட்டை மாவ ட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம், பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கந்தர்வகோட்டை பேருந்துநிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ரஜினி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ராமையன், ஒன்றியச் செயலாளர் வீராச்சாமி, நிர்வாகிகள் ரத்தினவேல், நாராயணசாமி, தர்மராஜ், சித்திரைவேல், இளையராஜா உள்ளிட்டோர் பேசினர்.
விவசாயிகள் வாங்கிய அனைத்து வகை வங்கிக் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும். 4 வழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பிரசாரம் நடைபெற்றது.