திருமணமான ஒரு வாரத்தில் விஷம் குடித்து பெண் சாவு

அறந்தாங்கி அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அறந்தாங்கி அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருநாளூர் தெற்குக் கிராமத்தை சேர்ந்தவர்  மாணிக்கம் மகன் சுந்தர்ராஜ் (30). வெளிநாட்டில் வேலைபார்க்கும் இவருக்கும் வலப்பிரமன்காட்டை சேர்ந்த  அசோகன் மகள் நித்யாவுக்கும் (24) கடந்த புதன்கிழமை (செப். 12) திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திங்கள் இரவு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.  தகவலறிந்து வந்த பெண் வீட்டார் தகராறை விசாரித்தபின் அப்பெண்ணை தங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுமாறு சுந்தர்ராஜூடம் கூறினர். இதையடுத்து நித்யாவை  கணவர்இருசக்கர வாகனத்தில் அழைத்து வர,  பெண்ணின் குடும்பத்தினர் வேறு வாகனத்தில் வந்தனர்.   வீட்டுக்கு வந்தபோது திடீரென வாயில் நுரைதள்ளி நித்யா மயங்கி விழுந்தார்.கணவர் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவர் பூச்சி மருந்து குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்  இறந்தது தெரியவந்தது.  இதையடுத்து பெண்ணிடம் சடலத்தை  கணவர் வீட்டார்  திருநாளூர் தெற்கு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணமும் விசாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com