நெய்வேலியில் நடைபெற்ற 61 ஆவது குடியரசு தின விழா தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை புதுகை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் நெய்வேலியில் 61 ஆவது மாநில குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தடகளப் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு.கணேஷ் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.