பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையில் மக்கள்பாதை இயக்கம் சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மக்கள்பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் தலைமையில் மறவாமதுரை ஊராட்சி உடையார்குளம் கரை, மற்றும் முக்கியப்பகுதிகளில் மண்வளம் மற்றும் இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 300 பனை விதைகளை மக்கள்பாதை உறுப்பினர்கள் நட்டனர்.