மாணவர்கள் மரம் வளர்க்க முன்வரவேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ்.
புதுகை அருகேயுள்ள விராச்சிலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.விராச்சிலை நகரத்தார் சங்கத் தலைவர் மெய்யப்ப செட்டியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கிப் பேசியது:
மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று மரம் வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நான் மெய்யப்ப செட்டியார் நடுநிலைப்பள்ளியில் படித்தவன். இப்பகுதியை சோலைவனமாக மாற்ற மாணவ, மாணவிகள் முயல வேண்டும். அதற்கு பெற்றோர்களும், பொதுமக்களும் உதவ வேண்டும் என்றார். விழாவில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.