பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றார் திரைப்பட நடிகர் கார்த்தி சிவகுமார்.
பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டியில் நடைபெற்ற பணியாளர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: வாக்களிப்பது நமது உரிமையும், கடமையுமாகும். எனவே நாம் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். அதேபோல், யாருக்கு வாக்களிக்கிறோம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். விழாவில், நடிகர் சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.