புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மூன்றாம் கட்ட மாவட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2019 சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 இடங்களும், விராலிமலை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 12 இடங்களும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தம் 210 இடங்களும் காலியாக உள்ளன.
இந்தக் காலியிடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் ஆக. 20 ஆம் தேதி வரை இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு நடைபெறும் தகவல் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 04322 -221584 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.