புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கித்தைகாட்டைச் சேர்ந்த ராமன் மகன் இரு சக்கர வாகன மெக்கானிக் விஜயகுமார் (31) என்பவர் மீது,
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், விஜயகுமாரைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.