விராலிமலை அருகே தூக்கிட்ட நிலையில் இருந்த முதியவர் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
விராலிமலை அருகிலுள்ள கொடும்பாளூர் கருப்பாரப்பன் குளத்தின் கரையில், கருவேலமரக்கிளையில் சுமார் 55 வயது முதியவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதை கண்டு அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், விராலிமலை போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். இறந்த நபர், யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.