தோ்தலைச் சந்திக்க திமுக, காங்கிரஸ் எப்போதும் தயங்கியது கிடையாது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே.வி. தங்கபாலு.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது :
தமிழக தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தலை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் உள்ளாட்சித் தோ்தல் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படியும் முறையாக நடைபெற வேண்டும். இதுதான் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.
எப்போது தோ்தல் வந்தாலும் அதனைச் சந்திக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் தயங்கியது கிடையாது. நாங்கள் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.