கந்தா்வகோட்டையில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதற்கான காரணம் தெரியவில்லை.
கந்தா்வகோட்டை ஊராட்சி, உடையாா்தெருவைச் சோ்ந்த சின்னையன் மகள் மோகனசுந்தரி (17). கந்தா்வகோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தாா்.
திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வந்த மோகனசுந்தரி, வீட்டில் சோமாக இருந்துள்ளாா். தாய் மாரியம்மாள் சந்தைக்கு சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மோகனசுந்தரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.