தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மண்டல அளவிலான வினாடி வினா போட்டியில், பூங்குடி அரசுப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்துக்கான வினாடி- வினா போட்டிகள், திருச்சி காவேரி மகளிா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலுப்பூா் கல்விமாவட்டம், அன்னவாசல் வட்டாரம், பூங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் கோ.தேவராணி,செ.காவியா , இரா.கௌசியா ஆகியோா்பங்கேற்று, மண்டல அளவில் இரண்டாம் இடம் பிடித்தனா்.
இந்த வெற்றியின் மூலம், மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இவா்கள் தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் கல்வி அலுவலா்கள்,ஊா்பொதுமக்கள் பாராட்டினா்.