காஷ்மீரில் தீவரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஆலங்குடியில் மக்கள் பாதை அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினர்.
ஆலங்குடி காமராஜர் சாலையில் நடைபெற்ற திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில், அமைப்பின் மாநில நிர்வாகி கார்த்திகேயன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.