புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினத்தையொட்டி பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
உலக தாய்மொழி தினமான வியாழக்கிழமை கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு, இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழன் தலைமை வகித்தார். மாணவிகளுக்கு தாய்மொழி குறித்து பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.