புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் நிலத்தரகர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சேர்ந்தவர் ஜெயபால் (55) நிலம் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டவந்த இவர், சனிக்கிழமை புதுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் கீரமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். திருவரங்குளம் வனப்பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த ஜெயபால் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த எம். ஜான் சாக்ரடீஸ் (25) என்பவரைக் கைது செய்துள்ளனர்.