அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பெருநாவலூரில் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகிலுள்ள இக்கல்லூரியில் குடிநீர் மற்றும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை. எனவே இந்த வசதிகளை செய்து தர வேண்டும்.
மின்சாதனங்கள் பழுது மற்றும் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு மற்றும் விடுமுறை நாள்களில் சமூக விரோதிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி, வளாகத்தை அசுத்துமாக்கின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறியதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.