மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பொன்னமராவதி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பொன்னமராவதி பிரிவு அலுவலகம் சார்பில், புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் செவலூர், கோவனூர், செம்பூதி, கொப்பனாப்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், தூத்தூர், தொட்டியம்பட்டி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.