புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி மண்டல ஐ. ஜி வரதராஜூலு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குடி காவல் சரகத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களின் வழக்கு தொடர்பான கோப்புகள், பதிவேடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது, புதுக்கோட்டை காவல்கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.