புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளதால், 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்தவர்கள் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட் ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.