புதுக்கோட்டை
ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து அறந்தாங்கியில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.கர்ணா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வசந்த் மற்றும் சங்க நிர்வாகிகள் புதுகை சேசுராஜ், ராஜி, புதுமைராஜன், மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.