விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் விளாப்பட்டியில் தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றத்தலைவர் ரா.சரவணக்குமார் வரவேற்றார். புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் விழாவின் நோக்கவுரையாற்றினார். புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சார்பில், 30க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.