ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகள் பேராவூரணி தனியார் கல்லூரிக்கு 2 தினங்களுக்கு முன் சென்றபோது வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து பழனியப்பன் விசாரித்தபோது, வடகாடு ஊராட்சி மல்லிகைப்புஞ்சையைச் சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ் (27) திருமணம் செய்வதாக கூறி பவித்ராவை கடத்திச்சென்றது தெரியவந்ததாம்.
இதைத் தொடர்ந்து பழனியப்பன் வடகாடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். வடகாடு பாப்பாமனையைச் சேர்ந்த எஸ். துஷ்யந்தினியை ராஜேஷ் காதலித்து ஏமாற்றி மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிந்து, அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர், ராஜேஷ் தலைமறைவாக உள்ளார்.