புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் இருந்து மேட்டுப்பட்டிக்கு செல்லும் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான புல்பண்ணையில் செவ்வாய்க்கிழமை பகலில் திடீரென தீப்பிடித்தது.
பொது மக்களின் தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இரண்டாம் நாளாக இதே பகுதியில் திடீர் திடீரென தீப்பற்றி எரிவது குறிப்பிடத்தக்கது.