பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலகுறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆர். பெரியபொன்னன் இல்லத் திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வலையபட்டி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி. ராஜசேகர், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். ஜெயராமன் மற்றும் ஆர்.பாலகுறிச்சி, ரெகுநாதபட்டி, விடத்தலாம்பட்டி, கோபால்பட்டி,சீகம்பட்டி ஊரார்கள், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று மணமக்களான பி.சேதுராமன்- எஸ். முத்தாயி ஆகியோரை வாழ்த்தினர். முன்னதாக முன்னாள் ஊராட்சித் தலைவரும், விநாயகா பைனான்ஸ் உரிமையாளருமான ஆர். பெரியபொன்னன் வரவேற்றார். பொன். வையாபுரிப்பட்டி பி. செந்தில்குமார் நன்றி கூறினார்.