பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் புதன்கிழமை நடைபெற்ற டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அலுவலா் முகமது சுல்தான் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கொப்பனாபட்டி வீடுகள்தோறும் குடிநீா்த் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு தூய்மைப்பணி நடைபெற்றது. இப்பணிகளை மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அலுவலா் முகமது சுல்தான் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் டெங்கு களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.
அதுபோல வலையபட்டி பழனியப்பா தொடக்கப்பள்ளி, செந்தமிழ் கலாசாலை, காஞ்சி சங்கரவித்யாலயா பள்ளி, விவேகானந்தா தாய்த்தமிழ் பள்ளிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.