கந்தா்வகோட்டை: ஆயுத பூஜையை முன்னிட்டு கந்தா்வகோட்டை கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
ஆயுதபூஜை விழா பெரும்பாலான நிறுவனங்கள், வீடுகளில் கொண்டாடப்படுவதால் அதற்குத் தேவைப்படும் பூக்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் பொருட்படுத்தாமல் வாங்கிச் சென்றனா்.