கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன்  கோயிலில் மண்டகபடி திருவிழா

கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆவணி வார மண்டகபடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆவணி வார மண்டகபடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுகிழமைகளில் மண்டகபடிதாரர்கள் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது . அதேபோல் நிகழாண்டு ஆவணி ஞாயிறு திருவிழா வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, நான்காம் வார மண்டகபடி விழா கந்தர்வகோட்டை இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. 
திருவிழாவையொட்டி காலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில்  பூத்தட்டு, முளைப்பாறி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com