மகிமை நாயகி அம்மன் கோயில் திருவிழா

புதுக்கோட்டை வடக்கு 3 ஆம் வீதியிலுள்ள மகிமை நாயகி அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலின்

புதுக்கோட்டை வடக்கு 3 ஆம் வீதியிலுள்ள மகிமை நாயகி அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலின் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது.
புதுக்கோட்டை வடக்கு 3 ஆம் வீதியிலுள்ள மகிமை நாயகி அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலின் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 17ஆம் தேதி  பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு அலங்காரங்களுடன் வீதிவுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காப்பு அகற்றுதல், மஞ்சள் நீராடுதல் ஆகியவற்றுடன் பங்குனித் திருவிழா நிறைவடைந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com