வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

புதுக்கோட்டையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ,அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ,அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த  நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மாலதி, வருவாய்க் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றும் அனைத்துத் துறை ஊழியர்களும் மனிதச்சங்கிலியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com