மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்களை பணி நியமனம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இப்பணியை, சிவகங்கை மக்களவைத் தொகுதி பொது பார்வையாளர் ஹர்பிரீத் சிங் பார்வையிட்டார். இந்த ஒதுக்கீடு இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் கட்டமாகவும், ஏப். 4ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.