புதுக்குளத்தில் இளைஞர் சடலம் மீட்பு

புதுக்கோட்டை புதுக்குளத்தில் மிதந்த இளைஞர் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை புதுக்குளத்தில் மிதந்த இளைஞர் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை புதுக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக கணேஷ் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து  நிகழ்விடம் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த இளைஞர் புதுக்கோட்டை காமராஜபுரம் 14ஆம் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் (22) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து கணேஷ்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com