பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் நிரஞ்சனா(13). பொன்னமராவதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு பால்காரரிடம் சில்லறை வாங்கவில்லை என மணிகண்டன் திட்டியுள்ளார். இதில், மனமுடைந்த நிரஞ்சனா தந்தையும், தாயும் பணிக்கு சென்றபின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பழ.தியாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். எனினும் நிரஞ்சனா உடல் கருகி உயிரிழந்தார். மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.