புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் சார்பில், இன்றைய உலகில் டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, இயந்திரவியல் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
லண்டனை சேர்ந்த பிகிலிட்டி இணையக் குழுமத்தின் நிர்வாகி ஷிவால்கர் பரமானந்தம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்கிற்கு, கல்லூரியின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் எஸ். சுதா வரவேற்றார்.
கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் எஸ்.ஜெ. சதீஷ் ஆரோன் ஜோசப் நன்றி கூறினார். தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவர் ஆர் .மணிமாறன் தொகுத்து வழங்கினார்.