கண்டியாநத்தம் கிராமத்தில் கோடைகால தூய்மைப்பணி 

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் "புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா' மற்றும்

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் "புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா' மற்றும் கண்டியாநத்தம் "அக்னி சிறகுகள் இளைஞர் மன்றம்' சார்பில் தூய்மை பாரதம் கோடைகால தூய்மைப்பணி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந் நிகழ்வில், அக்னி சிறகுகள் மன்ற உறுப்பினர்கள் இணைந்து இடையன் கண்மாய் வரத்து வாரிப்பகுதிகளை சீரமைத்தனர். அக்னி சிறகுகள் மன்றத் தலைவர் சங்கர், செயலர் முருகேசன், பொருளாளர் சிவராமகிருஷ்ணன், கணக்காளர் பெரியசுப்பையா, துணைத்தலைவர் சக்திவேல், துணைச்செயலர் போஜராஜன் உள்ளிட்டோர் களப்பணியாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com