புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதி நியாயவிலைக் கடைகளின் கணக்குகள் அனைத்தும், சமூகத் தணிக்கைக்காக வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்
பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார். பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளின் கணக்குகளைப்
பார்வையிட்டு அது தொடர்பாகவும் கருத்து, புகார் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் கூறினார்.