கந்தர்வகோட்டை செட்டிச்சத்திரத் தெருவில் வசித்து வந்தவர்கள் ராஜேந்திரன் (57) இவரது மனைவி சாவித்திரி (50). திங்கள்கிழமை வீட்டில் சாவித்திரி ஸ்டவ்வை பற்ற வைக்கும்போது தீப்பற்றி படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது கணவர் ராஜேந்திரனும் படுகாயமடைந்தார்.
இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாவித்திரி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை இறந்தார். கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.