பாதயாத்திரை செல்லும் காவடி குழுவுக்கு வரவேற்பு

இலுப்பூரிலிருந்து 46 ஆம்ஆண்டாக  பழமுதிர்ச்சோலை (அழகர்கோயில்) செல்லும் பாதயாத்திரை

இலுப்பூரிலிருந்து 46 ஆம்ஆண்டாக  பழமுதிர்ச்சோலை (அழகர்கோயில்) செல்லும் பாதயாத்திரை குழுவினருக்கு  மேலத்தானியத்தில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
நிகழாண்டு இக்குழுவினர் 108 காவடிகளுடன் செவ்வாய்க்கிழமை இலுப்பூர் பொன்மாசிநாதர்கோயிலிருந்து புறப்பட்டு அன்று மதியம் மேலத்தானியம் வந்தனர். 
அக்குழுவினருக்கு மேலத்தானியம் பொதுமக்கள் வரவேற்பு அளித்து அன்னதானம் வழங்கினர். இதையடுத்து மேலத்தானியம் சிவன் கோயிலில் வழிபட்டு அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரை செல்லும் இக்குழுவினர் வரும் சனிக்கிழமை பழமுதிர்சோலையை அடைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com