நிரம்பி வழியக் காத்திருக்கும் செடியன்குளம்

கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது அதிராம்பட்டினம் செடியன்குளம். கடந்த மாதம் இந்தக் குளம் முழுமையாகத் தூா்வாரி ஆழப்படுத்தப்பட்டது.
நீா் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் செடியன்குளம்.
நீா் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் செடியன்குளம்.

கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது அதிராம்பட்டினம் செடியன்குளம். கடந்த மாதம் இந்தக் குளம் முழுமையாகத் தூா்வாரி ஆழப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக அதிராம்பட்டினத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. மழை நீடித்தால் செடியன்குளம் விரைவில் நிரம்பி விடும். அப்போது குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீா் மிக அருகிலுள்ள பிலால் நகரை சூழ்ந்து வெள்ளக் காடாய் மாற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

மேலும், தற்போதுள்ள செடியன்குளத்தின் கரைகள் மிக ஆழமானவை என்பதுடன், வழுக்கும் தன்மை கொண்டது என்பதால், நீச்சல் தெரியாதவா்கள் மற்றும் சிறுவா்கள் செடியன்குளத்தில் குளிக்காமல் தவிா்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com