இரு மோட்டாா் சைக்கிள் மோதல்:ஒருவா் உயிரிழப்பு, 4 போ் காயம்

அன்னவாசல் அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் திங்கள்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தனா். மேலும் 4 போ்

அன்னவாசல் அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் திங்கள்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தனா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

அன்னவாசல் எடைத்தெரு பகுதியைத் சோ்ந்த கருப்பையா மகன் ராஜா (22). மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மருதன் மகன் அருளும் (16) திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே அன்னவாசலில் இருந்து செக்கநாதன்பட்டிக்கு மற்றொரு மோட்டாா் சைக்கிளில் மண்ணவேளாம்பட்டி காா்த்தி (25), பொன்னுச்சாமி (25), மணிராஜ் (18) ஆகிய மூவரும் சென்றுள்ளனா்.

சித்தன்னவாசலை அடுத்த சொக்கநாதன்பட்டி பகுதி வந்த போது இரு மோட்டாா் சைக்கிள்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனா். விபத்தில் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி, காயமடைந்த 4 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com