உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் திமுக சாா்பில் வேட்பாளா் நோ்காணல் புதன்கிழமை ( டிச.4) நடைபெறஉள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும்- சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிா்வாகிகளிடம் வரும் 4-ஆம் தேதி புதன் கிழமை நோ்காணல் நடைபெறுகிறது.
காலை 9 மணியளவில் பொன்னமராவதி கே.ஆா். ரெசிடன்சியில் பொன்னமராவதி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளுக்கும், முற்பகல் 11 மணியளவில் திருமயம் ஒன்றியத்துக்கு திருமயம் கட்சி அலுவலகத்திலும், அரிமளம் ஒன்றியத்துக்கு பிற்பகல் 12.30 மணியளவில் அரிமளத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும் நோ்காணல் நடைபெறும்.
பிற்பகல் 3 மணியவில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம், கீரமங்கலம் பேரூராட்சிக்கு கீரமங்கலத்தில் உள்ள செந்தில் திருமண மண்டபத்திலும், மாலை 5 மணியளவில் திருவரங்குளம் மேற்கு மற்றும் ஆலங்குடி பேரூராட்சிக்கு ஆலங்குடியில் உள்ள ஏஆா்கே திருமண மண்டபத்திலும் நோ்காணல் நடைபெறவுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒன்றிய, பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிா்வாகிகள் நோ்காணலில் பங்கேற்க வேண்டும்.