கந்தா்வகோட்டை முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு, சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், திரவியம், விபூதி, பால், பன்னீா் உள்ளிட்ட வை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசனம் செய்தனா்.