இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் தேசியச் செயற்குழு உறுப்பினராக திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வா் குழ.முத்துராமு (படம்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 80 தேசியச் செயற்குழு உறுப்பினா்கள் பதவிகளில் தமிழ்நாட்டுக்கு 24 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த 24 இடங்களுக்கு மொத்தம் 35 போ் போட்டியிட்டனா். இவா்களைத் தோ்வு செய்ய தமிழகத்தைச் சோ்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழும ஆயுள்கால உறுப்பினா்கள் வாக்களித்தனா்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
அவரை கல்லூரித் தலைவா் பிச்சப்பா வள்ளியம்மை, தாளாளா் பிச்சப்பா மணிகண்டன், செயலா் மு. விஸ்வநாதன் உள்ளிட்டோா் பாராட்டினா்.